கடந்த சில நாட்களுக்கு முன் டெரர்கும்மி தளத்தில் சகோ ராமசாமி ஒரு பயோடேட்டா போட்டு, அதில் நீங்கள் போட்ட பின்னூட்டம் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.
ராமசாமி அவர்களின் பதிவிற்கு பின்னூட்டமிட்ட, தமிழ்மணத்தின் நிர்வாகியாகிய நீங்கள், ராமசாமி பதிவுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு "சாந்தியும் அவ அக்காவும் சமாதானியும் உங்களுடன் கூடிய..சே! பதிவு தோஷம் " என்ற வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறீர்கள்.
இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சலாம் சொல்லி கொள்வோம். அதை நீங்களும் அறிந்ததே!
அதன் பொருள் "உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்"
என்பதாகும். அந்த வார்த்தையை அவமதிக்கும் விதமாக "சாந்தியும் அவ அக்காவும் சமாதானியும் உங்களுடன் கூடிய..சே! பதிவு தோஷம் " என்று அருவெறுக்க தக்க வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
பெண்களை கேலி செய்யும் விதமாகவும் அமைத்துள்ளன. தாங்கள் எழுதியதை வைத்து பார்க்கும் போது தமிழ்மணத்தை நிர்வகிக்கும் ஆணாதிக்கவாதி என்ற ------- எழுதியுள்ளீர்கள்.
இஸ்லாமியர்களைகளையும், இஸ்லாத்தையும் கொச்சைபடுத்த தான் அந்த வார்த்தையை பயன் படுத்தி இருக்கீறீர்கள் . இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது எந்த வகையிலும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது.
ஒரு நாலாந்தர மனிதனை போல நாகரீகம் இல்லாமல் எழுதிய அந்த பின்னூட்டம் எத்தனை பேர் உள்ளங்களை வேதனை படுத்தி இருக்கும் என்பதை என் சகோதர சகோதரிகள் எழுதிய பதிவுகளிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
கட்டணசேவை என்று என்று நீங்கள் அடிக்கும் கொள்ளையை தான் ராமசாமி அவர்கள் பதிவில் வெளியிட்டு இருந்தார். அவருக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு இஸ்லாமியர்கள் மீதும்,இஸ்லாத்தின் மீதும்
பாய்வதன் நோக்கம் என்ன ?
நீங்கள் பயன்படுத்தி இருக்கும் இந்த வார்த்தைகளிருந்து நீங்கள் "ஒரு தரம் தாழ்ந்த மனிதர்" என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களை நீங்களே அசிங்கப் படுத்தி கொண்டு விட்டீர்கள். மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீது படும் என்று தெரிந்தே செய்ததன் விளைவு தான் இது.
பதிவர்களை வைத்துதான் திரட்டிகள் பயன் அடைகின்றது . திரட்டிகளை வைத்து பதிவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால்
நீங்கள் பணம் பார்ப்தற்கு எங்களை போன்ற பதிவர்களை பயன்படுத்தி கொள்கிறீர்கள். அது தானே உண்மை
காலங்களில் பதிவுகள் எப்படி இருந்தாலும் சேர்த்துப்போம் என்று கூறி பதிவர்களை இழுப்பது. பின்னர் ஒரு அளவுக்கு முன்னேறிய பிறகு ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது. கேடு கெட்ட இந்த செயலை தான் இப்போது செய்து இருக்கிறீர்கள்.
பொறுப்பான இடத்தில் இருக்கும் நீங்கள் ஒரு ............போல எங்களை கேலி செய்ததை எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. சில மாற்றுமத சகோதரர் பதிவிலும் நீங்கள் அறிவீர்கள்.
நடந்த சம்பவங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இந்த பிரச்னைக்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள். ஏனென்றால் இதை ஆரம்பித்து வைத்தது நீங்கள் தானே. நீங்கள் தான் முடித்தும் வைக்க வேண்டும். அதுதான் தமிழ்மணத்திற்கும், உங்களுக்கும் நல்லது.
நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் .காலம் தாழ்த்தாமல் முடிவெடுங்கள்.
==========================================================================
///"சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///
என்று மேற்கண்ட அவருடைய தளத்தில் எழுதி உள்ளார்கள்
மிக்க நன்றி பெயரிலி என்ற சகோ இரமணிதரன் அவர்கள்