பயணி -1 : என்ன சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி -1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவர் : பேஷண்ட்டோட நெஞ்சுல பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டாரு டாக்டர்!
மற்றொருவர்: "மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்ன்னு சொன்னாங்க. அதுக்காக இப்பிடியா?'
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?
ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தோழி : 1: உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார் ஏண்டி
தோழி :2 : ஓ அதுவா நான் மேக்கப்பை கலைத்தது தான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அம்மா... இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள்.... போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டீச்சர் : உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என் கூட பிறந்தவங்களை சொன்னேன் ...
டீச்சர்: ?????
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(டிவி ஷோ ரூம் ஒன்றில்)
விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : அறிவுகெட்ட முண்டம் தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன் : !!!!!!!??????????????
உங்கள் சகோதரி